/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி எளாவூர் ரயில்வே மேம்பாலம்
/
பராமரிப்பின்றி எளாவூர் ரயில்வே மேம்பாலம்
ADDED : ஜன 26, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி'கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில், சுண்ணாம்புகுளம் நோக்கி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தை மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் அந்த மேம்பாலம் வழியாக தினசரி கடந்து செல்கின்றனர். மேம்பாலத்தின்யோரம் மண்டிய மண்ணை அகற்றாததால், அதில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அந்த செடிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.