sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 செடி, கொடிகளில் சிக்கிய மின்கம்பங்கள் போந்தவாக்கத்தில் அவலம்

/

 செடி, கொடிகளில் சிக்கிய மின்கம்பங்கள் போந்தவாக்கத்தில் அவலம்

 செடி, கொடிகளில் சிக்கிய மின்கம்பங்கள் போந்தவாக்கத்தில் அவலம்

 செடி, கொடிகளில் சிக்கிய மின்கம்பங்கள் போந்தவாக்கத்தில் அவலம்


ADDED : டிச 03, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 03, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: மின்கம்பங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், அவசர காலத்தில் பழுது நீக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் இருந்து போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், கச்சூர், சித்தஞ்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியில் கம்பங்கள் அமைத்து, கம்பி மூலம் மின்சாரம் செல்கிறது. இதில் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

தற்போது மழை பெய்து வரும் நிலையில், அவசர காலத்தில் பழுது பார்க்க கம்பத்தின் மேல் ஏற முடியாத நிலை உள்ளது. எனவே, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us