/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சார ரயிலில் புகை நடுவழியில் நிறுத்தம்
/
மின்சார ரயிலில் புகை நடுவழியில் நிறுத்தம்
ADDED : பிப் 13, 2024 09:35 PM

கடம்பத்துார்:வேலுார் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று காலை 6:00 மணிக்கு புறநகர் மின்சார ரயில் புறப்பட்டது. காலை 8:30 மணியளவில் செஞ்சிபானம்பக்கம் - கடம்பத்துார் ரயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயிலின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வருவதாக ரயில் பயணியர் தெரிவித்தனர்.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு ரயில் லோகோ பைலட் இறங்கி வந்து புகை வந்த பகுதியை பார்வையிட்டார்.
தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.
தொடர்ந்து அந்த ரயிலை மெதுவாக இயக்கி சென்றனர். பின் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. பெரும்பாலான பயணிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி மற்ற ரயில்களில் ஏறி சென்றனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையில் புகை வந்த பகுதி சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

