/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 30, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூரில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் பெரியகுப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை பிப்.,1ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. காஞ்சிபுரம் மின்பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் சுனில்குமார் கலந்து கொள்கிறார்.
திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பகுதியில் மின்துறை சம்பந்தமான புகார்களை மனுவாக கொடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.