sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

/

சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

சுற்றுப்புற - நட்பு சூழல் திட்டம் மரக்கன்று நடும் பணி துவக்கம்


ADDED : ஏப் 19, 2025 10:00 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:கடம்பத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொப்பூர் ஊராட்சியில் நேற்று, திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை இணைந்து 'சுற்றுப்புற சூழல் -- நட்பு சூழல்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பிரதாப், மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தனர்.

பின், கலெக்டர் கூறியதாவது:

சுற்றுப்புற சூழல்களை பாதுகாக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு முன்னெடுப்பு பணியை எடுத்து வருகிறது. நம் மாவட்டம் அதிகமான தொழில் வளர்ச்சி உள்ள பகுதியாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவசாய நிலங்களை அழித்து வருகிறோம்.

வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியால், இயற்கை சுற்றுச்சூழல் படிப்படியாக குறைந்து வருகிறது. இயற்கையான வெப்பநிலையை காட்டிலும் 2 - 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக உள்ளது.

இதுபோன்று, மரக்கன்று நடப்படும் பணியை மேற்கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் திருவள்ளூர் மாவட்டம் முன்மாதிரியாக விளங்கி வருகிறது என்ற சாதனையை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us