/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார்வேட் நகர ராஜா பங்களாவை பாதுகாக்க தொல்லியத்துறை கையகப்படுத்த எதிர்பார்ப்பு
/
கார்வேட் நகர ராஜா பங்களாவை பாதுகாக்க தொல்லியத்துறை கையகப்படுத்த எதிர்பார்ப்பு
கார்வேட் நகர ராஜா பங்களாவை பாதுகாக்க தொல்லியத்துறை கையகப்படுத்த எதிர்பார்ப்பு
கார்வேட் நகர ராஜா பங்களாவை பாதுகாக்க தொல்லியத்துறை கையகப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : பிப் 17, 2025 02:42 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது பங்களா தோட்டம் கிராமம். இங்கு 300 ஆண்டுகளுக்கு முன், 17ம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள கார்வேட் நகர ராஜா இப்பகுதியை ஆண்டு வந்ததாக கூறுப்படுகிறது.
இப்பகுதியில் அவர் வாழ்ந்தமைக்கு சான்றாக பங்களா இன்றளவும் உள்ளது. 30க்கும் மேற்பட்ட தூண்கள், நுணுக்கமான கட்டட கலையுடன் காட்சியளிக்கிறது. இந்த பங்களா, 40 ஆண்டுகளாக பாழடைந்து காணப்படுகிறது. பங்களாவுக்கு வரும் சாலைகள் மற்றும் பங்களாவிற்கு சொந்தமான நிலங்களை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
பகுதிவாசிகள் பங்களாவை மீட்டு அதற்கு சொந்தமான நிலங்கள் மீட்க வேண்டும் சாலை அமைக்க வேண்டும் என வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கடந்தாண்டு செப்., 24ம் தேதி வருவாய் துறையினர் அளவீடு செய்தனர். பின், நிலங்கள் மீட்கப்பட்டன. ஊரக வளர்ச்சி துறை வாயிலாக சாலை அமைக்கப்பட்டன. தற்போது கிராம மக்களின் உதவியுடன் பங்களா பராமரிக்கப்பட்டு வருகிறது. இதை தொல்லியல் துறையினர் மீட்டு பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.