/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர் காப்பீடு அவகாசம் வரும் 30 வரை நீட்டிப்பு
/
பயிர் காப்பீடு அவகாசம் வரும் 30 வரை நீட்டிப்பு
ADDED : நவ 21, 2024 02:28 AM
திருவள்ளூர், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா பருவ நெற்பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பாண்டிற்கான சம்பா பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலஅவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும், சம்பா பருவ நெற்பயிர் மேற்கொண்டுள்ள கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், 'இ -- சேவை' மையங்களில், பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் காப்பீட்டு கட்டணமாக, ஏக்கருக்கு 518 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.