sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குறைந்த அழுத்த மின் வினியோகம் விவசாயிகள் புகார்

/

குறைந்த அழுத்த மின் வினியோகம் விவசாயிகள் புகார்

குறைந்த அழுத்த மின் வினியோகம் விவசாயிகள் புகார்

குறைந்த அழுத்த மின் வினியோகம் விவசாயிகள் புகார்


ADDED : அக் 09, 2025 10:18 PM

Google News

ADDED : அக் 09, 2025 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:விவசாய கிணறுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்வதை தடுப்பதற்கு, கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மனு அளித்தனர்.

திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்தார். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பொறுப்பு முருகபூபதி வரவேற்றார்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய தலைவர் லிங்கமூர்த்தி மற்றும் விவசாயிகள் மேற்பார்வை பொறியாளரிடம் வழங்கிய மனுவில், வி.கே.என்.கண்டிகை, டி.சி. கண்டிகை ஆகிய பகுதிகளில் விவசாய கிணறுகளுக்கு மிக குறைந்த அழுத்த மின்சாரம் வழங்குவதால், மின்மோட்டார்கள் இயக்க முடியவில்லை. சீரான மின்சாரம் வழங்குவதற்கு கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும்' என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us