sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

துர்நாற்றம் வீசும் வானியன் குட்டை தடுப்புகள் இல்லாததால் அச்சம்

/

துர்நாற்றம் வீசும் வானியன் குட்டை தடுப்புகள் இல்லாததால் அச்சம்

துர்நாற்றம் வீசும் வானியன் குட்டை தடுப்புகள் இல்லாததால் அச்சம்

துர்நாற்றம் வீசும் வானியன் குட்டை தடுப்புகள் இல்லாததால் அச்சம்


ADDED : ஜூலை 24, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பந்தியூர்:திருப்பந்தியூர் பகுதியில் உள்ள வானியன் குட்டையை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து, கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த குட்டைக்கு தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்தில் திருப்பந்தியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து பண்ணுார் செல்லும் நெடுஞ்சாலையோரம், பயணியர் நிழற்குடை அருகே வானியன் குட்டை உள்ளது. இந்த தண்ணீரை பகுதிமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த குட்டை போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ந்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த குட்டைக்கு தடுப்புகள் இல்லாததால், பகுதிமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வானியன் குட்டையை துார்வாரி சீரமைத்து, சுற்றி தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us