நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற புண்ணாக்கு மலை உள்ளது.
இந்த மலை உச்சியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் உள்ளதாக பூ மாலை கட்டும் தொழிலாளர்கள் நேற்று காலை திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.