/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குவாரி பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: அசம்பாவிதம் தவிர்க்க வேலி அவசியம்
/
குவாரி பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: அசம்பாவிதம் தவிர்க்க வேலி அவசியம்
குவாரி பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: அசம்பாவிதம் தவிர்க்க வேலி அவசியம்
குவாரி பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: அசம்பாவிதம் தவிர்க்க வேலி அவசியம்
UPDATED : ஜன 03, 2026 09:02 AM
ADDED : ஜன 03, 2026 05:39 AM

சோழவரம்: செம்மண் குவாரியில் உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் அங்கு குளிக்க செல்வர். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க, குவாரி பள்ளங்களை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவரம் அடுத்த பழைய எருமைவெட்டிப்பாளையம், தேவனேரி, புதிய எருமை வெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் செம்மண் குவாரிகள் செயல்பட்டன.
இதற்காக ஒவ்வொரு பகுதியிலும், 30 - 50 அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதில், அங்கு ராட்சத பள்ளங்கள் உருவாகின.
தற்போது, இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி சிறு சிறு குளங்களாக மாறி உள்ளன.
விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சிறுவர்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் தேங்கியுள்ள குவாரி குட்டையில் ஆபத்தை உணராமல் ஜாலியாக குளித்து விளையாடுகின்றனர்.
ஒரு சிலர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் கொண்டு வந்து சுத்தம் செய்கின்றனர்.
இதனால், அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, செம்மண் குவாரிகள் செயல்பட்ட இடங்களை சுற்றிலும் முள்வேலி அமைத்து, எச்சரிக்கை பலகைகள் வைத்து அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

