/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரபுராந்தகர் கோவிலில் மே 1ல் கொடியேற்றம்
/
திரபுராந்தகர் கோவிலில் மே 1ல் கொடியேற்றம்
ADDED : ஏப் 21, 2025 11:41 PM
கூவம், கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், சித்தரை திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முன்னதாக, வரும் 30ம் தேதி இரவு மிருத்சங்கி, வாஸ்துசாந்தி, விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 14 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை 6:00 மணிக்கும், மாலை 6:00 - இரவு 8:00 மணி வரை என, இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர் வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், மே 7ம் தேதி காலை 9:00 மணிக்கு நடைபெறும். வரும் 14ம் தேதி பஞ்சமூர்த்தி அபிஷேகம் மற்றும் ரிஷப வாகன சேவையுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.