sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பூச்சி, வண்டுகளுடன் மாவு பாக்கெட்கள் பறிமுதல்

/

 பூச்சி, வண்டுகளுடன் மாவு பாக்கெட்கள் பறிமுதல்

 பூச்சி, வண்டுகளுடன் மாவு பாக்கெட்கள் பறிமுதல்

 பூச்சி, வண்டுகளுடன் மாவு பாக்கெட்கள் பறிமுதல்


ADDED : ஜன 20, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் 'கோவை பழமுதிர் நிலையம்' கடையில், கெட்டுப்போன, பூச்சிகள் உள்ள 100 கிலோ மாவு மற்றும் 20 கிலோ பேரிச்சம்பழம் ஆகியவற்றை, உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர், ஜே.என்.சாலையில் கோவை பழமுதிர் சோலை நிலையம் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. அங்கு, பழங்களுடன், கடலை, உளுந்து, ரவை, மைதா, கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட மாவு பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவற்றை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள், அவற்றில் பூச்சி இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு, புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, மாவு உள்ளிட்ட பொருட்களை சோதனை செய்து, பூச்சி, வண்டுகள் இருந்த 110 கிலோ மாவு பொருட்கள் மற்றும், நிறம் மாறிய பேரிச்சம் பழங்களை பறிமுதல் செய்தனர்.

மாதிரிகள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், பரிசோதனை முடிவு அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us