sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆங்காடில் அறுந்த மின்ஒயரில்  சிக்கி நான்கு மாடுகள் பலி

/

ஆங்காடில் அறுந்த மின்ஒயரில்  சிக்கி நான்கு மாடுகள் பலி

ஆங்காடில் அறுந்த மின்ஒயரில்  சிக்கி நான்கு மாடுகள் பலி

ஆங்காடில் அறுந்த மின்ஒயரில்  சிக்கி நான்கு மாடுகள் பலி


ADDED : டிச 29, 2024 09:22 PM

Google News

ADDED : டிச 29, 2024 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அடுத்த, ஆங்காடு கிராமத்தில், நேற்று மாலை, குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்லும் மின்ஒயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.

அதே சமயம், அவ்வழியாக மேய்ச்சலுக்கு சென்று கொண்டிருந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த, நாகராஜன், 35, என்பவருக்கு, சொந்தமான நான்கு எருமை மாடுகள் அறுந்த மின்ஒயரில் சிக்கின. அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து அவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

தகவல் அறிந்த சோத்துப்பெரும்பேடு மின்வாரியத்தினர் அப்பகுதியில் உடனடியாக மின்இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சோழவரம் போலீசாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:

மின்ஒயர் அறுந்தபோது, அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் யாரேனும் அவ்வழியாக சென்றிருந்தால், அசம்பாவிதங்கள் நேரிட்டிருக்கும். மின்ஒயர்களை முறையாக பராமரிப்பதில்லை. மின்வாரியத்தினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us