sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உருக்காலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: நான்கு பேர் 'சீரியஸ்'

/

உருக்காலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: நான்கு பேர் 'சீரியஸ்'

உருக்காலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: நான்கு பேர் 'சீரியஸ்'

உருக்காலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: நான்கு பேர் 'சீரியஸ்'


ADDED : பிப் 11, 2025 12:08 AM

Google News

ADDED : பிப் 11, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராம எல்லையில், சூர்யதேவ் அலாய்ஸ்' என்ற பெயரில் கட்டுமான இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில், நேற்று, காலை 7:00 மணியளவில், கொதிகலனில் இருந்த இரும்பு தீக்குழம்பு வெளியே சிதறியது.

அங்கு பணியில் இருந்த, உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாயல், 24, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்தர், 25, பாசில் ரகுமான், 28, பங்கஜ்குமார், 18, பிஹாட்ராம், 24, ஆகிய ஐந்து பேர் பலத்த தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சாயல் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த தில்காஷ், 18, என்பவர் லேசான தீக்காயங்களுடன், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த விபத்து குறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சரவணன் தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us