ADDED : அக் 31, 2025 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய, மாநில அரசு பணிகளுக்கான அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 5ம் தேதி துவங்கப்பட உள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்தவர்கள், இரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணப்பத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்.

