/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார்மென்ட் பெண் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
கார்மென்ட் பெண் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : நவ 06, 2024 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கிரேஸ், 54. இவர், திருவாலங்காடு ஒன்றியம் கூளூரில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த போது மயங்கி விழுந்தார். அவரை மீட்ட சக ஊழியர்கள், கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிரேஸின் மகன் அருண் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.