ADDED : பிப் 13, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: அரசு பேருந்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்தவரை காணவில்லை என, அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஊத்துக்கோட்டை அடுத்த, செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 25. சென்னை தண்டையார்பேட்டை அரசு பேருந்து பணிமனையில், தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த, 31ம் தேதி வேலைக்கு சென்று பின், கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.
இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் மாரியம்மா கொடுத்த புகாரின்படி ஊத்துக்கோட்டை போலீசார், ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

