/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்
ADDED : ஜன 06, 2025 01:46 AM

பூந்தமல்லி,:பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,160 மாணவர்கள் பயில்கின்றனர். கடந்த ஆண்டுடன், இப்பள்ளி நுாற்றாண்டை பூர்த்தி செய்தது.
நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் இணைந்து, மினி மாரத்தான் போட்டியை நேற்று நடத்தினர்.
இந்த போட்டியை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியிலிருந்து இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டம், நரசத்பேட்டையில் நிறைவுற்றது.
இதில், பூந்தமல்லி மற்றும் அதை சுற்றியுள்ள முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், தற்போதைய மாணவர்கள் என, 850 பேர் பங்கேற்றனர்.