ADDED : ஜன 27, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி மகன் சீனிவாசன், 59. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு தன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, திருத்தணி - நாகலாபுரம் நெடுஞ்சாலையில் சந்தான கோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, திருத்தணியில் இருந்து நாகலாபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். கனகம்மாசத்திரம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.