நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஓரத்தூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ராஜி 45. இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஹான்ஸ் 2,400 கிராம், கூல்லிப் 900 கிராம், விமல் பாக்கு 250 கிராம் என, மொத்தம் 3,550 கிராம் எடையிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, பெட்டிக்கடை உரிமையாளர் ராஜி, 45, என்பவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.