/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பறிமுதல்: கடத்தியவர் கைது
/
குட்கா பறிமுதல்: கடத்தியவர் கைது
ADDED : மே 24, 2024 04:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற, டூவீலர் ஒன்றை நிறுத்தி, அதில் இருந்த மூட்டையை சோதனையிட்டனர். அந்த மூட்டையில், 30 கிலோ எடை குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. குட்காவுடன் டூ-வீலரை பறிமுதல் செய்த போலீசார், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியை சேர்ந்த நிஜாமுதீன், 37, என்பவரை கைது செய்தனர்.