ADDED : ஜன 23, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஆந்திராவில் இருந்து, திருத்தணி வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று, திருத்தணி போலீசார், பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில், போலீசார் சோதனை நடத்தியதில், ஒரு பயணி தன் பையில், 15 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
பின், விசாரணையில் சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகரைச் சேர்ந்த காசிராஜன், 39, என்றும், இவர் அரக்கோணம் அடுத்த, நெமிலி பெருமாள்பூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாகவும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் காசிராஜனை கைது செய்தனர்.

