/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது
/
பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது
ADDED : செப் 23, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்தை நிறுத்தி பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த, அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், 44, என்பவரிடம், மூன்று கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.