sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சொகுசு காராக மாற்றிய ஜிப்ஸி ஆவணம் இல்லாததால் பறிமுதல்

/

சொகுசு காராக மாற்றிய ஜிப்ஸி ஆவணம் இல்லாததால் பறிமுதல்

சொகுசு காராக மாற்றிய ஜிப்ஸி ஆவணம் இல்லாததால் பறிமுதல்

சொகுசு காராக மாற்றிய ஜிப்ஸி ஆவணம் இல்லாததால் பறிமுதல்


ADDED : ஜன 19, 2025 02:47 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி அடுத்த, பொன்பாடி பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனைச் சாவடி இயங்கி வருகிறது.

இங்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் நாராயணன், வாகனங்களை தணிக்கை செய்யும் பணியில், நேற்று ஈடுபட்டிருந்தார்

சென்னையில் இருந்து, திருப்பதிக்கு படப்பிடிப்புக்காக சென்ற, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் போன்று வடிவமைக்கப்பட்ட வாகனத்தை சந்தேகத்தின்படி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிறுத்தி சோதனை செய்தார்.

விசாரணையில், இந்த கார், நடிகர் ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான, 'பிரதர்' படத்தில் பங்கேற்ற சொகுசு கார் என தெரிய வந்தது.

அதை தொடர்ந்து வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்ததில், 'ஜிப்ஸி' வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலரின் முறையான அனுமதியின்றி, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் போல வடிவமைப்பு செய்து, சினிமா சூட்டிங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்ததும் தெரிந்தது.

மேலும், இந்த வாகனம், ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்து, தமிழ்நாட்டிற்கான வாகனவரி செலுத்தாமல் இயக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து இந்த வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல்செய்தார்.






      Dinamalar
      Follow us