ADDED : ஜன 13, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: ஜன. 13---: கனகம்மாசத்திரம் அருகே நெல் அறுவடையின் போது, இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது.
பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமத்தில், சுப்பிரமணி, 50, என்பவரது விவசாய நிலத்தில், நெல் அறுவடை செய்யும் பணி நேற்று முன்தினம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த குப்பத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தயாளன், 45, என்பவரது அறுவடை இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
அப்போது, திடீரென இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. பின், தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இது குறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
