sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போக்குவரத்து துறை அலுவலகத்தால் கும்மிடிபூண்டியில் கடும் நெரிசல்

/

போக்குவரத்து துறை அலுவலகத்தால் கும்மிடிபூண்டியில் கடும் நெரிசல்

போக்குவரத்து துறை அலுவலகத்தால் கும்மிடிபூண்டியில் கடும் நெரிசல்

போக்குவரத்து துறை அலுவலகத்தால் கும்மிடிபூண்டியில் கடும் நெரிசல்


ADDED : ஏப் 17, 2025 01:30 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில், மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.

அங்கு, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த புதிய வாகனங்களின் பதிவு, வாகன தகுதி சான்று உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பதிவுக்கு வரும் புதிய இருசக்கரம் மற்றும் கார்களை நிறுத்த இடவசதி இல்லாததால், அனைத்து வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

அதேபோல், தகுதி சான்று பெற வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன. மோட்டார் வாகன ஆய்வாளர், அங்கு நிறுத்தப்படும் நுாற்றுக்கணக்கான வாகனங்களின் இன்ஜின் எண் ஆகியவற்றை சரிபார்த்து முடிக்கும் வரை, அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்படுகின்றன.

இதனால், இச்சாலையில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விரைவில், போக்குவரத்து அலுவலகத்திற்கு, கும்மிடிப்பூண்டியில் தனி இடம் ஒதுக்கி, சொந்த கட்டடத்தில் போதிய இடவசதியுடன் இயக்க வேண்டும்.

அதுவரை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, மாற்று இடத்தில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us