sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

/

அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : பிப் 24, 2024 10:09 PM

Google News

ADDED : பிப் 24, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளன. தினசரி இச்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதில், 'டாரஸ்' எனப்படும் பெரிய லாரிகள், சவுடு மண் லோடுடன் அசுர வேகத்தில் சாலைகளில் செல்கின்றன.

அதிகம் லோடு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அசுர வேகத்தில் செல்கின்றன. இவ்வாறு செல்லும் டாரஸ் லாரிகள் அனைத்தும், அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிச் செல்கின்றன.

அதிக பளு காரணமாக சாலை சேதமடையும் நிலை உள்ளது. மேலும், அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால், விபத்து அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

பாதசாரிகளும், சைக்கிள் போன்ற இருசக்கர வாகன ஓட்டிகள், டாரஸ் மண் லாரிகளை பார்த்து அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. அசுர வேகத்தில் செல்லும் லாரிகளையும், அதிக பாரம் ஏற்றிச் செல்வதையும், வட்டார போக்குவரத்து துறையினரோ, காவல் துறையினரோ கண்டு கொள்வதில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அதிக பாரம் ஏற்றி, அசுர வேகத்தில் செல்லும் லாரி ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என, திருவள்ளூர் எஸ்.பி.,க்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மோசமான மாற்று சாலை


சென்னை - -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது துராபள்ளம் பஜார் பகுதி.

அங்குள்ள மேம்பாலம் மற்றும் பஜார் பகுதி சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

பயன்பாட்டில் இருந்த சாலையில் மேம்பால விரிவாக்க பணிகள் நடந்து வருவதால், அதன் அருகே புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாற்று சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலை சீராக இன்றி, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக அங்குள்ள தனியார் பள்ளி அருகே சாலை படுமோசமான நிலையில் உள்ளது.

அந்த வழியாக கடந்து செல்லும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து, துராபள்ளம் பஜார் பகுதியில் உள்ள மாற்று சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us