வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலை துறை அலுவலகம் / பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலை துறை அலுவலகம்
/
திருவள்ளூர்
பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலை துறை அலுவலகம்
ADDED : ஜூன் 15, 2025 02:39 AM
திருத்தணி:
தோட்டக்கலை துறையின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கும் பழம் மற்றும் காய்கறி விதைகள், மிளகாய், கத்திரிக்காய், தேங்காய் நாற்றுகள் போன்றவை வைப்பதற்கும் போதிய இடவசதி இல்லை. மேலும், அங்கு பணிபுரியும் நான்கு ஊழியர்கள் அமரக்கூட முடியாமல் தவித்து வருகின்றனர். இடவசதியில்லாததால், விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் விளக்கம் அளிக்க முடிவதில்லை.பல ஆண்டுகளாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியும், தற்போது வரை நடவடிக்கை இல்லை.தற்போதுள்ள கட்டடமும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழை பெய்தால் அலுவலகத்தில் ஊழியர்கள் அமர்ந்து வேலை செய்ய முடியாத நிலை தொடர்கிறது. காரணம் மழைநீர் ஒழுகுவதால் மழை பெய்யும் போது, தோட்டக்கலை அலுவலர்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை.எனவே, மாவட்ட கலெக்டர் இனியாவது தோட்டக்கலை துறைக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.