/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடு புகுந்து பணம் செயின் திருட்டு
/
வீடு புகுந்து பணம் செயின் திருட்டு
ADDED : மே 14, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே, சித்துார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜா மனைவி மணிமேகலை, 34. இவர், நேற்று அதிகாலை குழந்தைகளுடன் வீட்டில் உள்ள அறையில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அவரது கணவர் வீட்டின் கதவை திறந்து வைத்து வெளியே துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், 6,000 ரூபாய் மற்றும் மணிமேகலை அணிந்திருந்த 1 சவரன் செயினை திருடிவிட்டு தப்பினார். பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.