/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு வலை
/
வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு வலை
ADDED : ஜன 09, 2025 09:55 PM
திருத்தணி:திருத்தணி, குண்டலுார் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி, 30; இவரது மனைவி கவிதா, 27; இவர்களுக்கு திருமணம் ஆகி, 3 ஆண்டுகளான நிலையில், மூன்று மாதம் மட்டுமே தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் கணவர், ரகுபதி, அவரது தந்தை கஜேந்திரன், தாய் சின்னபாப்பா, ஆகியோர் கவிதாவிடம், இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும் என துன்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், கவிதாவிடம், ரகுபதி பணம் கொண்டு வரும்படி, மத்தால் கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த கவிதா, மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்ற பின், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணவர் ரகுபதி, மாமியார் சின்னபாப்பா, மாமனார் கஜேந்திரன் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். புகாரின் மீது போலீசார் மேற்கண்ட மூன்று பேர் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

