/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரின் உடலை தண்டவாளத்தில் வீசி வழக்கை திசை திருப்ப முயன்ற கள்ளக்காதலி கைது
/
வாலிபரின் உடலை தண்டவாளத்தில் வீசி வழக்கை திசை திருப்ப முயன்ற கள்ளக்காதலி கைது
வாலிபரின் உடலை தண்டவாளத்தில் வீசி வழக்கை திசை திருப்ப முயன்ற கள்ளக்காதலி கைது
வாலிபரின் உடலை தண்டவாளத்தில் வீசி வழக்கை திசை திருப்ப முயன்ற கள்ளக்காதலி கைது
ADDED : ஆக 10, 2025 12:50 AM

திருவள்ளூர், ஆக. 10-
வாலிபரின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசி, வழக்கை திசை திருப்ப முயன்ற கள்ளக்காதலி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் தண்டவாளத்தில், ஜூன் 19ம் தேதி வெட்டுக்காயங்களுடன் ஆண் உடல் கிடந்தது. திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், புட்லுார் பகுதியைச் சேர்ந்த மேத்யூ, 30, என்பது தெரிந்தது. காக்களூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் பணிபுரிந்த இவருக்கு, ஜான்சி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். மகன் சாவில் மர்மம் இருப்பதாக, மேத்யூவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனையில், அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், மேத்யூவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த உஷா, 29, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கூலிப்படையை வைத்து மேத்யூவை உஷா கொலை செய்ததும், ரயில் மோதி இறந்ததாக விசாரணையை திசை திருப்ப, உடலை தண்டவாளத்தில் வீசியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், உஷா, ராணிப்பேட்டை விஷ்வா, 19 மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள பால்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

