sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் போலீசாரின் பறிமுதல் வாகனங்கள்

/

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் போலீசாரின் பறிமுதல் வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் போலீசாரின் பறிமுதல் வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் போலீசாரின் பறிமுதல் வாகனங்கள்


ADDED : ஜன 31, 2024 11:34 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் நிறுத்தி வைத்திருப்பதால், சாலை குறுகி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது.

கவரைப்பேட்டை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், காவல் நிலையம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஆந்திராவில் இருந்து பொன்னேரி வழியாக மணலி, எண்ணுார் துறைமுகம் செல்லும் கன்டெய்னர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அந்த இணைப்பு சாலை வழியாக சென்று வருகின்றன.

பறிமுதல் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை தவிர்த்து, எஞ்சியுள்ள குறுகிய சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

இதனால், அந்த இணைப்பு சாலையில் போக்குவரத்து நெருக்கடி மட்டுமின்றி விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.

எனவே, போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை, தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தாமல், காவல் நிலையத்தை சுற்றியுள்ள காலி இடங்களில் நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us