sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆந்திராவில் 'கள்' சீசன் துவக்கம் படையெடுக்கும் பாடர்வாசிகள்

/

ஆந்திராவில் 'கள்' சீசன் துவக்கம் படையெடுக்கும் பாடர்வாசிகள்

ஆந்திராவில் 'கள்' சீசன் துவக்கம் படையெடுக்கும் பாடர்வாசிகள்

ஆந்திராவில் 'கள்' சீசன் துவக்கம் படையெடுக்கும் பாடர்வாசிகள்


ADDED : பிப் 17, 2024 11:21 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, பனங்'கள்' பிரியர்களுக்காக, தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர பகுதிகளில், பனை மரங்களில் கலயங்கள் கட்டி, 'கள்' இறக்கும் பணிகளை பனை தொழிலாளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 'கள்' விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் 'கள்' விற்பனை அனுமதிக்கப்படுகிறது. ஆந்திராவை பொறுத்தமட்டில், 'கள்' இறக்கி விற்பனை செய்பவர்கள், அம்மாநில அரசிடம் விற்பனை உரிமம் பெறுகின்றனர். ஆண்டுதோறும், பிப்ரவரி மாத மத்தியில் துவங்கி, ஜூன் மாதம் வரை, 'கள்' இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

கோடைக்காலங்களில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 'கள்' பிரியர்கள் அதிக அளவில் ஆந்திராவை நோக்கி படை எடுப்பது வாடிக்கையானது.

அதனால், கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பனங்காடு, பூண்டி, காரூர், வெங்கடாதிரிபாளையம் உள்ளிட்ட, 18 கிராமங்களில், 'கள்' விற்பனை, முழு வீச்சில் நடைபெறும்.

தற்போது, கோடை வெயில் துவங்கியதால், மேற்கண்ட கிராம பகுதிகளில், பனைமர கிளைகளைக் கழிப்பது, பாளை சீவுவது, கலயம் கட்டுவது, 'கள்' இறக்குவது என, பிசியாக காணப்படுகின்றனர்.

தமிழக 'கள்' பிரியர்கள் அளித்து வரும் வரவேற்பு காரணமாக, தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர பகுதியில், நுாற்றுக்கணக்கானோர், பனங்'கள்' இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us