sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடியில் பெய்த தொடர் மழை பள்ளி மாணவர்கள் கடும் அவதி

/

கும்மிடியில் பெய்த தொடர் மழை பள்ளி மாணவர்கள் கடும் அவதி

கும்மிடியில் பெய்த தொடர் மழை பள்ளி மாணவர்கள் கடும் அவதி

கும்மிடியில் பெய்த தொடர் மழை பள்ளி மாணவர்கள் கடும் அவதி


ADDED : நவ 13, 2024 01:50 AM

Google News

ADDED : நவ 13, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நேற்று தொடர் மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று அதிகாலை நேரத்தில் கனமழை பெய்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருந்தனர்.

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகாலை பெய்த மழை சிறிது நேரம் அடங்கியது. பின், பரபரப்பான காலை நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. இதனால், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பள்ளி நேரத்தில் மழையை எதிர்பார்க்காத பெரும்பாலான மாணவர்கள் குடைகளை எடுத்து வரவில்லை. ஒரு சிலர் மட்டுமே குடையுடன் பள்ளிக்கு சென்றனர்.

இதனால், குடையின்றி வந்த மாணவர்கள், மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us