தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடுக்குமாடி குடியிருப்பு பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அடுக்குமாடி குடியிருப்பு பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அடுக்குமாடி குடியிருப்பு பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


ADDED : நவ 21, 2024 08:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 08:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமை வகித்து பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக 9 திட்டப் பகுதிகளில் 1,106 கோடியில் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில், தாழவேடு-520, முருகம்பட்டு-1040, பூச்சிஅத்திபேடு-1152, அருங்குளம் பகுதி 1ல்- 432, அருங்குளம் பகுதி 2ல்-912, அருங்குளம் பகுதி 3ல்-768 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணி 90 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது.மீதம் உள்ள பணி, 3 மாதத்திற்குள் நிறைவு பெற்று, மக்களுக்கு வழங்கப்படும். மப்பேடு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியினை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாக்கம் மற்றும் நுாம்பல் திட்டப்பகுதிகளில் நீதிமன்ற வழக்குள் விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us