sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

/

ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 03, 2025 07:52 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில், 120 ஊராட்சிகளில், பல்வேறு திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறையின் திருத்தணி கோட்ட உதவி செயற்பொறியாளர் கோமதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், நான்கு ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் எந்த அளவில் உள்ளது என, ஒன்றியம் வாரியாக விவாதிக்கப்பட்டது. பின், ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தார்ச்சாலைகள் தரமான முறையில் அமைக்க வேண்டும் என, உதவி செயற்பொறியாளர் கோமதி அறிவுறுத்தினார். இதில், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us