sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாநில எல்லையோர சாலையில் போதிய கண்காணிப்பு இல்லை

/

மாநில எல்லையோர சாலையில் போதிய கண்காணிப்பு இல்லை

மாநில எல்லையோர சாலையில் போதிய கண்காணிப்பு இல்லை

மாநில எல்லையோர சாலையில் போதிய கண்காணிப்பு இல்லை


ADDED : மார் 30, 2025 12:37 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில், ஆந்திராவில் இருந்து தமிழகத்தை இணைக்கும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், எளாவூர் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. அதேபோல், ஆந்திர மாநிலத்தை இணைக்கும் கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், பொம்மாஜிகுளம் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது.

ஆனால், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தில் இருந்து மாநெல்லுார், பல்லவாடா, கண்ணம்பாக்கம் வழியாக, ஆந்திர மாநிலம் ஆரூர், தடா செல்லும் சாலையில் சோதனைச்சாவடி இல்லை. ஏதேனும் தகவல் கிடைத்தால் மட்டுமே, இச்சாலையில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொள்வர்.

இதனால், இச்சாலை வழியாக அரிசி, கஞ்சா, மணல் கடத்தல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த சாலையில், கண்ணம்பாக்கம் கிராமத்தில் போலீஸ் சோதனைச்சாவடி அமைத்தால், இரு மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் சம்பங்களை தடுக்க முடியும்.

அதற்கு, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us