sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அறிவுசார் நகரில் தொழில் துவங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

/

அறிவுசார் நகரில் தொழில் துவங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

அறிவுசார் நகரில் தொழில் துவங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

அறிவுசார் நகரில் தொழில் துவங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு


ADDED : டிச 31, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 31, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, டதிருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில், 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், 200 கோடி ரூபாய் செலவில், 1,700 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்கிறது.

அங்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பல்கலை, கல்வி நிறுவனங்கள் போன்றவை தங்களின் கிளை, ஆய்வகம், திறன் மேம்பாட்டு மையம் போன்றவற்றை அமைக்கலாம்.

இதன் வாயிலாக, தமிழக மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி கிடைப்பதுடன், பல நாடுகளின் அறிவு பரிமாற்றம் கிடைக்கும்.

தமிழக கல்வி, தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அறிவுசார் நகரத்தில் உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.

இதற்கிடையே, அறிவு சார் நகரில் தொழில் துவங்க வருமாறு, தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட, அனைத்து தேசிய கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் துறை கடிதம் எழுதியுள்ளது.






      Dinamalar
      Follow us