நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம், நாளை காலை 10:00 மணியளவில் நடக்கிறது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 10ம் வகுப்பு பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்கலாம். தனியார் துறையில் கணக்காளர், டெக்னீஷியன், மிஷின் ஆப்பரேட்டர், நிர்வாக பணி உள்ளிட்ட பல்வேறு வகையான பணி வாய்ப்பை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.