/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் வரும் 20ல் வேலை வாய்ப்பு முகாம்
/
திருவள்ளூரில் வரும் 20ல் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : டிச 18, 2024 12:36 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகத்தில், நாளை மறுதினம், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில், பங்கேற்க உள்ளவர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், கணக்காளர்; டெக்னீஷியன் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயனடையலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.