sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு மருத்துவம னையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

/

அரசு மருத்துவம னையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

அரசு மருத்துவம னையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

அரசு மருத்துவம னையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை


ADDED : நவ 17, 2024 01:24 AM

Google News

ADDED : நவ 17, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி அரசு மருத்துவமனையில் கடந்த,2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக பணியில் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேஷ், 37, தனியார்மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருத்துவத்துக்கு இணையாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்.

எலும்பு முறிவு, இடுப்பு, முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு அதிநவீன அறுவை சிகிச்சை செய்துவருகிறார்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மருத்துவர் வெங்கடேஷ், 44 பேருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை, 8 பேருக்கு, இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் 28 பேருக்குநுண்துளை மூங்கால் ஜவ்வு அறுவை சிகிச்சை என மொத்தம், 80 பேருக்கு அறுவை சிகிச்சை செய்தார். அனைவரும் நலமாக உள்ளனர்.

இது குறித்து எலும்பு முறிவு மருத்துவர் வெங்கடேஷ் கூறுகையில், 'திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன முறையில் இலவசமாக செய்யப்படுகிறது.

எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறலாம்.

ஒரு வருடத்தில், 80 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு, தலைமை மருத்துவர், சகமருத்துவர்கள், செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us