/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது
/
குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது
ADDED : டிச 03, 2024 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து இரு மூட்டைகளுடன் வந்த டூ - -வீலரை நிறுத்தி சோதனையிட்டனர். மூட்டைகளில் இருந்த, 40 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதை கடத்திய, புதுகும்மிடிப்பூண்டி பாலயோகி நகரைச் சேர்ந்த சக்திவேல் முருகன், 26, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.