sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கிருஷ்ணா கால்வாய் கரை சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' கழிவுநீர் கலப்பால் ஏரி நீரின் தரம் கேள்விக்குறி

/

 கிருஷ்ணா கால்வாய் கரை சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' கழிவுநீர் கலப்பால் ஏரி நீரின் தரம் கேள்விக்குறி

 கிருஷ்ணா கால்வாய் கரை சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' கழிவுநீர் கலப்பால் ஏரி நீரின் தரம் கேள்விக்குறி

 கிருஷ்ணா கால்வாய் கரை சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' கழிவுநீர் கலப்பால் ஏரி நீரின் தரம் கேள்விக்குறி


ADDED : நவ 27, 2025 04:08 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், நீர்வள ஆதாரத்துறையினர் சீரமைத்த கரைகள், தொடர்ந்து சேதபடுத்தப்பட்டு வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி நீரின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து உருவாகும் கூவம் ஆறு, அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாயாக பிரிந்து, தண்டலம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.

தடுத்து நிறுத்தம் தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கழிவுநீர் மற்றும் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.

இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீரின் தரம் கேள்விக்குறியாகி, கடந்த ஆகஸ்ட் மாதம் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் நீர்வள ஆதாரத்துறையினர், கிருஷ்ணா கால்வாய்க்கு தனியார் மருத்துவக்கல்லுாரியிலிருந்து வரும் கழிவுநீர் பகுதியில் உள்ள கரைகளை சீரமைத்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், கரைகள் சீரமைக்கப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் கரைகள் சேதப்படுத்தப்பட்டு, கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் சேகரமாகி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீர்வள ஆதாரத்துறையினர், மீண்டும் கரைகளை சீரமைத்தனர்.

கோரிக்கை தற்போது மீண்டும் கிருஷ்ணா கால்வாயின் இருபுறமும் கரைகள் சேதப்படுத்தப்பட்டு, க ழிவு நீர் கலந்து வருகிறது.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, கிருஷ்ணா கால்வாய் பகுதியில் கரைகளை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரைகளை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us