/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கும்மிடிப்பூண்டி ஐ.ஆர்.டி., சாலை
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கும்மிடிப்பூண்டி ஐ.ஆர்.டி., சாலை
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கும்மிடிப்பூண்டி ஐ.ஆர்.டி., சாலை
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கும்மிடிப்பூண்டி ஐ.ஆர்.டி., சாலை
ADDED : மார் 14, 2024 10:12 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் நோக்கி ஐ.ஆர்.டி., சாலை பிரிகிறது. அந்த சாலை, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், ஐ.ஆர்.டி., எனப்படும் போக்குவரத்து துறையின் ஓட்டுனர் பயிற்சி பிரிவு வளாகம் வழியாக தாசில்தார் அலுவலகம் வரை செல்கிறது.
பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்த ஒன்றிய சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாமிரெட்டிகண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடையில் உள்ள ரயில்வே கேட் வரையிலான 300 மீட்டர் சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமான நிலையில் உள்ளது.
அதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் அனைத்தும் பெயர்ந்து, பல இடங்கள் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர், உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக அந்த சாலையை 'பேவர் பிளாக்' சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

