/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
/
ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
ADDED : நவ 14, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் ஏரி நிலத்தை நீர்வளத் துறையினர் மீட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்தில், நீர்வளத்துறையினர் பராமரிப்பில் ஏரி உள்ளது. ஏரிக்கு உட்பட்ட, 2 ஏக்கர் நிலத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தனர்.
இதுகுறித்து தொடர் புகார்கள் வந்ததால், நேற்று இரு பொக்லைன் இயந்திரங்களுடன், நீர்வளத்துறையினர் அங்கு சென்றனர்.
ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் பயிர் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி மீட்டனர்.

