sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

/

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜன 28, 2025 07:58 PM

Google News

ADDED : ஜன 28, 2025 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை முதல், பிப்.13ம் தேதி வரை தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 'ஸ்பார்ஸ்' தொழுநோய் விழிப்புணர்வு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:

காந்தி நினைவு நாளான ஜன.,30ல் உலக தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை முதல், பிப். 13ம் தேதி வரை, 'ஸ்பார்ஸ்' தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் ஐந்து ஒன்றியத்தில், தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது. வீடு வீடாக சென்று, சுகாதார துறையைச் சேர்ந்த களப் பணியாளர் மற்றும் தன்னார்வலர் இப்பணி மேற்கொள்ள உள்ளனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவ - மாணவியருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மருத்துவப் பணி துணை இயக்குனர் கனிமொழி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us