ADDED : நவ 24, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சந்திரன், 45. இவர் வீட்டில், மதுபாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று அதிகாலை அவரது வீட்டில் திருவாலங்காடு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, விற்பனைக்காக வைத்திருந்த, 2,500 ரூபாய் மதிப்புள்ள, 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

