நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில், அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, பீஹார் மாநிலத்தை சேர்ந்த குகன் தாஸ், 56, என்பவர், அவர் வசிக்கும் வீட்டில் மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம், 28 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.