ADDED : செப் 05, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: ஆந்திராவில் இருந்து அனுமதியின்றி டிப்பர் லாரிகள் மூலம், தமிழகத்திற்கு கிராவல் மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி போலீசார் நேற்று, பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த லாரியை போலீசார் நிறுத்தினர்.
அதில், அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் கார்த்திக், 33, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
